புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2019

தாம்பரத்தில் கடைசியாக மாயமான போது கண்டுபிடிக்கப்படாத இந்திய விமானப்படை ஏ.என்.32 ரக விமானம்

அசாமில் இருந்து அருணாசல பிரசேத்துக்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் மாயமானது.

அசாமில் இருந்து 13 பேருடன் அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் சீன எல்லையில் திடீரென மாயமானது. அதை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த பின்னர் அதுகுறித்து எந்தஒரு தகவலும் தெரியவரவில்லை. விமானப்படை அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் ராணுவம் மற்றும் இந்தோ–திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தின் பாதையில் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த 2016–ம் ஆண்டு ஜூலை 22–ந் தேதி காலையில் ஏ.என். 32 ரக விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட்பிளேருக்கு புறப்பட்டது. 29 பேருடன் சென்ற அந்த விமானம் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே பறந்தபோது மாயமானது. இதைத்தொடர்ந்து விமானப்படை விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் கடலில் தேடும் பணிகள் நடந்தன. சுமார் 2 மாதங்கள் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே இந்த பணிகளை நிறுத்துவதாக செப்டம்பர் 22–ந் தேதி விமானப்படை அறிவித்தது. அந்த விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் நிலை பற்றிய விவரங்கள் இன்றுவரை மர்மமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஷிய தயாரிப்பான இந்த ஏ.என்.32 ரக விமானம் இரட்டை என்ஜின் கொண்டதாகும். விமானப்படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த விமானம் கடந்த 40 ஆண்டுகளாக பணியில் இருந்தது.

ad

ad