தகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 11 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
இதன்போது, உளவுத் தகவல்களை வழங்கியவர்களிடம் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எந்த காலப்பகுதியில் தகவல்கள் வழங்கப்பட்டன, அது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பன குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.