புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2019

மோடியுடன் முக்கிய விடயங்களை பேசப்போகிறதாம் கூட்டமைப்பு

இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொழும்பில் முக்கிய பேச்சு நடைபெறவுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

இலங்கை வரும் மோடியை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, நாளைமறுதினம் இலங்கை வருகின்றார். நாளை சனிக்கிழமை மாலைதீவு செல்லும் இந்தியப் பிரதமர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து திரும்பும் வழியில் கொழும்பில் தரித்துச் செல்வார்.
வெறுமனே நான்கு மணி நேரங்கள் மட்டுமே மோடி தங்கியிருக்கின்ற நிலையில் இலங்iகை-இந்திய ஒப்பந்த பிரகாரம் வடகிழக்கு இணைப்பினை சந்திப்பின் போது கூட்டமைப்பு வலியுறுத்தவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்தியப் பிரதமர் இலங்கை வருகின்றார். அவருக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ரவூப் ஹக்கீம் – ரிஷாத் பதியுதீன் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினருடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.

ad

ad