புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2019

டெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் அமித்ஷாவை சந்தித்தார்

டெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடன் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை 11.45 மணிக்கு சந்தித்தார்.


இந்த சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உடனிருந்தார். ஏற்கனவே பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad