புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2020

24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை! மீண்டு வரும் இத்தாலி

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இத்தாலி இருந்து வந்தது.

அமெரிக்காவில்(21,969 பேர் உயிரிழப்பு) இந்த நோயின் தாக்கம் அதிகமானதால் இத்தாலி, 19,000-க்கும் மேற்பட்டோரை இழந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலியில் 24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 156,363 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று மட்டும்) 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கை ஆகும். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,899-ஐ தொட்டுள்ளது.
கடந்த 24 நாட்களாக இத்தாலியில் கொரோனாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை


மார்ச் 19 – 427 பேர்

மார்ச் 20 – 627 பேர்

மார்ச் 21 – 793 பேர்

மார்ச் 22 – 651 பேர்

மார்ச் 23 – 601 பேர்

மார்ச் 24 – 743 பேர்

மார்ச் 25 – 683 பேர்

மார்ச் 26 – 712 பேர்

மார்ச் 27 – 919 பேர்

மார்ச் 28 – 889 பேர்

மார்ச் 29 – 756 பேர்

மார்ச் 30 – 812 பேர்

மார்ச் 31 -837 பேர்

ஏப்ரல் 1 – 727 பேர்

ஏப்ரல் 2 – 760 பேர்

ஏப்ரல் 3 – 766 பேர்

ஏப்ரல் 4 – 681 பேர்

ஏப்ரல் 5 – 525 பேர்

ஏப்ரல் 6 – 636 பேர்

ஏப்ரல் 7 – 604 பேர்

ஏப்ரல் 8 – 542 பேர்

ஏப்ரல் 9 – 610 பேர்

ஏப்ரல் 10 – 570 பேர்

ஏப்ரல் 11 – 619 பேர்

ஏப்ரல் 12 – 431 பேர்

மார்ச் 19-ஆம் திகதிக்கு (427 பேர் பின்னர் மூன்று வாரங்கள் கழித்து முதல் முறையாக இத்தாலியில் நேற்று கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை (431 பேர்) மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதால் மக்களும், மருத்துவ ஊழியர்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்

ad

ad