பேயின் தகவலால் நாயுடன் வந்து கஞ்சா பிடித்த காதை
அன்பார்ந்த எனது வாசகப் பெருமக்களே..!
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்..)
‘உங்களின் வீட்டில் கஞ்சா இருப்பதாக 119 பொலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும்’ என்றார்கள்.
‘நான் ஒரு பத்திரிகை ஆசிரியர். கஞ்சா எதுவும் எனது வீட்டில் இல்லை. என்றாலும் உங்களின் கடமைக்கு நான் இடையூறு ஏற்படுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் தாராளமாகச் சோதனை இடலாம்’ என்று கூறி அரைகுறையாக விரித்திருந்த வாயிற்கதவை முழுமையாகத் திறந்து விட்டேன்.