![]() ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார் |
-
9 ஏப்., 2023
உகண்டாவில் உள்ள ராஜபக்ஷர்களின் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்! - ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை.
யாழில் அடாடித்தனம் காட்டிய பாதிரியார்
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
வவுனியாவில் ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்!
![]() சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் வவுனியாவில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. |
வடக்கில் அத்துமீறி வழிபாட்டுச் சின்னங்கள் வைக்க முடியாது!
![]() வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் |
8 ஏப்., 2023
யாழ்ப்பாணத்தின் மேல் உச்சம்!
7 ஏப்., 2023
உக்ரைன் போர் திட்டம்: இணையத்தில் கசிந்த அமெரிக்க ரகசிய ஆவணங்கள்
![]() உக்ரைன் போர் திட்டம் பற்றிய அமெரிக்க ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான வசந்தகால தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்க மற்றும் நேட்டோ திட்டங்களின் விவரங்களை வழங்கும் ரகசிய ஆவணங்கள் சமூக ஊடக தளங்களில் பரவியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதையடுத்து இந்த பாதுகாப்பு மீறல் குறித்து மதிப்பிட்டு வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது |
இனி அவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை...! புதிய கட்சி தொடங்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமா...?
-------------------------------------------------
தினத்தந்தி ஏப்ரல் 7, 11:18 am Text Size எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வதற்கு வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள்
நேட்டோ நாடுகளின் சாத்தியமான இலக்குகளை குறிவைக்கு ரஷ்ய அணு ஆயுதங்கள்
6 ஏப்., 2023
இந்தியப் பிரதமருக்கு 7 புலம்பெயர் அமைப்புகள் அவசர கடிதம்!
![]() இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன |
மொட்டுக்குள் சூழ்ச்சி!பெரமுனவின் பொதுச்செயலாளர்
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்த கட்சிக்குள்ளே சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார் |
QR 0662 .(02.05 A M )கடடார் விமானத்தில் கொழும்பு சென்ற பயணிகளின் பொதிகள் சூறையாடப்படடன .
5 ஏப்., 2023
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 7 பேர் விடுவிப்பு!
![]() திருச்சி புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு வளாகம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டாலும், சொந்த நாட்டுக்கு செல்லும் வரை இந்த சிறப்பு முகாமில் தான் தங்கி இருக்க வேண்டும் |
முன்பள்ளியில் பால் குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி!
![]() கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலை அருந்திய 13 சிறார்கள் ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
சிவ தோஷம்-குல நாசம் - சிவன் மீது கை வைத்த நாடு நாசமாகும்!
![]() இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டு வைக்கவில்லை. சிவ தோஷம்-குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது, சிவன் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார் |
நாவலர் மண்டப வழக்கு - ஆளுநரின் உத்தரவுக்கு இடைக்கால தடை!
![]() யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இருந்து, யாழ்ப்பாணம் மாநகர சபையை வெளியேற வடக்கு மாகாண ஆளுநர், பணித்தமைக்கு எதிராக, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இடைக்கால கட்டளை விதித்துள்ளது |
சூறையாடப்படுகிறது குடாக்கடல் பகுதி கடல் வளங்கள்
![]() யாழ்ப்பாணம் -குடாக்கடல் நீரேரிப் பகுதியிலுள்ள கடல்அட்டைப் பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் இந்தக் கடல் அட்டைப் பண்ணைகளினால் கடல்வளங்கள் சூறையாடப்படுவதுடன் கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய திணைக்களங்கள் இதுதொடர்பில் அக்கறை எடுத்து இதனை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அடிகளார் தெரிவித்தார் |
சூறையாடப்படுகிறது குடாக்கடல் பகுதி கடல் வளங்கள்!
![]() யாழ்ப்பாணம் -குடாக்கடல் நீரேரிப் பகுதியிலுள்ள கடல்அட்டைப் பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் இந்தக் கடல் அட்டைப் பண்ணைகளினால் கடல்வளங்கள் சூறையாடப்படுவதுடன் கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய திணைக்களங்கள் இதுதொடர்பில் அக்கறை எடுத்து இதனை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அடிகளார் தெரிவித்தார் |
ரணில் பக்கம் தாவும் ஹர்ஷ, ஏரான், கபீர்?
![]() எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ளவிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரே இணைந்து கொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
கொழும்புக்கு மேற்கே புவியோட்டில் பாரிய விரிசல்!
![]() கொழும்பிற்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் புவியோட்டில் பாரிய விரிசல்கள் காணப்படுவதாகவும், இதற்கும் மேல் மாகாணத்தை பாதிக்கும் நிலநடுக்கங்களுக்கும் இடையேதொடர்புள்ளதா என்பது தொடர்பில் முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். |
தம்பாட்டியில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு - இன்று எதிர்ப்பு போராட்டம்!
![]() ஊர்காவற்துறை- தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. |
4 ஏப்., 2023
சர்வதேச மன்னிப்புச் சபை-சஜித் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின்
3 ஏப்., 2023
விடுதலைப் புலிகளின் ராதா வான்படை உறுப்பினரின் சாட்சியத்தை நிராகரித்து நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு
14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளை
கொழும்பில் பெருமளவு அதிரடிப்படையினர் குவிப்பு! பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது மீண்டும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
லிட்ரோ எரிவாயுவின் விலை பெருந்தொகையால் அதிரடியாக குறைப்பு
நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்!
![]() அரசாங்கம் கொண்டு வரவுள்ள, பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுமாயின் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது |
தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்களால் மட்டுமே எதிர்த்துப் போராட முடியும்!
![]() இன்று வடக்கு - கிழக்கில் பல இடங்களிலே நில அபகரிப்புகள் இடம்பெற்றுக் கொண்டுவருகிறது, தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக திட்டமிட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது, இவற்றை எதிர்த்துப் போராடக்கூடியவர்கள் இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்கள் மட்டுமே என ப.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார் |
அத்தியாவசிய பொருட்களின் மொத்த விலை குறைப்பு!
![]() டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது |
தமிழ் எம்.பிக்களின் அரங்கம் - அழைக்கிறார் மனோ!
![]() தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த. சித்தார்த்தன் எம்.பி., தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. ஆகியோருக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் |
2 ஏப்., 2023
1 ஏப்., 2023
பாடசாலை கிரிக்கெட் போட்டியில் பரிதாபம்- ஜீப் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி!
![]() பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதுள்ளனர். ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது |
தந்தையை வெட்டிக் கொன்ற பதின்ம வயது மகன்கள் கைது!
![]() யாழ்ப்பாணத்தில் தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும் அவர்களுக்கு உதவிய அவர்களின் நண்பருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார் |
வங்கிக் கணக்குகளில் மோசடி செய்த 39 சீனர்கள் கைது
![]() பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர் |
சீனி, கோதுமை மா, பருப்பு விலைகள் குறைப்பு!
![]() இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மூன்றின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது. 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 210 ரூபாயாகவும் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 200 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது |
மேலும், 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பு 310 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. |
30 மார்., 2023
வெளியே வைத்து பூட்டப்பட் வியாளேந்திரன் மற்றும் சாணக்கியன்! பொலிஸார் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு
சஜித் அணியிலிருந்து 17 எம்.பிக்கள் அரசாங்கத்தோடு இணைவதற்கு முயற்சி
பலாலியில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள் திருட்டு
அமுலுக்கு வந்தது எரிபொருள் விலை குறைப்பு!
![]() நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும் |
வெடியரசன் கோட்டையை விகாரையாக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்
![]() யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிா்ப்பு தொிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று கவனயீா்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது |
ஈரோஸ் பிரபாகரனின் குழந்தை உள்ளிட்ட இருவரை கொன்றவர்களுக்கு மரணதண்டனை!
![]() ஈரோஸ் செயலாளர் நாயகம் பிரபாகரனின் 3 வயது பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய இருவரை 1997 ம் ஆண்டு கொலை செய்தமை 4 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் |
28 மார்., 2023
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் செயல்பட தடை விதிக்க வேண்டும்"- உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபஓபிஎஸ்-க்கு சாதகமான 2 பாய்ண்ட்tps://www.dailythanthi.com/News/State/aiadmk-general-committee-case-full-judgment-details-released-929704
அ.தி.மு.க.பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
யாப்பு விதிகளுக்கு அமையவே தலைவர், செயலாளர் தெரிவு!
![]() இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு, கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள். யாரும் அவசரப்படுவதால் பயன் இல்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார் |
முகாமையாளரை வேலையை விட்டு நீக்கியமையால் அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லம்
27 மார்., 2023
வெடுக்குநாறி மலை சிவன் உடைப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
![]() வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிவலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த போராட்டம் நடைபெற்றது |
கச்சத்தீவு புத்தர் சிலை - கடற்படை விளக்கம்
![]() கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் விளக்கமளித்துள்ளனர் |
துனிசியா கடற்கரையில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் பலி!
![]() துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது |
யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம்!
![]() யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். |
மிருசுவிலில் மரத்துடன் மோதிய வான்! - சாரதி பலி.
![]() யாழ்ப்பாணம் - கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார். வீதியில் பயணித்த வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
போரால் பிரிந்த கணவன்- மனைவி 33 ஆண்டுகளின் பின் சந்திப்பு!
![]() திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் போர் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொண்டனர் |
எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் உதயகலா!
![]() சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தின் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்: கொலைகாரனின் பெயரை விடாமல் கத்திய கிளி! வெளிவந்த உண்மை
26 மார்., 2023
பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா: கலக்கத்தில் ஐரோப்பிய நாடுகள்!!
பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி "சாம்பியன்
நாளை ஆரம்பமாகும் முதலாம் தவணை! - ஏப்ரல் 5 முதல் 16 வரை விடுமுறை.
![]() அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. முதல் தவணை கல்வி நடவடிக்கையின் முதற்கட்ட கல்வி நடைவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை இடம்பெறும் |
29 இலட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் 10 கிலோ அரிசி!
![]() 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளைஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். |
150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டம்
![]() அடுத்த நான்கு மாதங்களுக்குள் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும், இது மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே ஏற்படும் |
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கம் உடைப்பு! - விக்கிரகங்களும் மாயம்
டைப்பு! - விக்கிரகங்களும் மாயம். ![]() [Sunday 2023-03-26 18:00] |
![]() வவுனியா- நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன |
4 மணிநேரத்தில் இந்தியா செல்லலாம்! - 50 டொலர் / 15 000 Rs கட்டணம்.
![]() புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார் |
25 மார்., 2023
கனடாவில் மதுபான வரி அதிகரிப்பு!
![]() கனடாவில் மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் மதுபான வரி 6.3 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. உற்பத்தியாளர்கள் மீதான வரி விதிப்பு இறுதியில் வாடிக்கையாளர்களின் கொள்வனவை மோசமாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. |
மன்னார் புதைகுழி- 23 அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை!
![]() மன்னார் - சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது |
உணவு, வாழ்வாதார பாதுகாப்புக்கு உதவ ஐ.நா அபிவிருத்தி திட்டம் இணக்கம்!
![]() உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
கச்சதீவில் புத்தர் சிலைகள்- வெளிவரும் இரகசியங்கள்!
![]() கச்சதீவில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது |