புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012

வடமாகாண தேர்தல் 2013 இல் நடைபெறும்; ஜனாதிபதி அறிவிப்பு
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கில் ஜனநாயகத்தை பலப்டுத்தும் நோக்கில் வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் 2013 ஆண்டு நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, நாட்டில் தீர்வினைக் காண்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் இன்றைய நாளில் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
 
அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் இனவாதக் கட்சிகள் மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளார்
 
அதேவேளை வடக்கில் மாகாண சபைத் தேர்தலினை மேற்கொண்டால் சில நடைமுறைகளை மேற்கொள்வதற்கு தடையாக அமையும் என கட்சிகள் பல கூறிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad