புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது. இப்போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மும்பை ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது.டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. முன்னணி வீரர்கள் நிக் காம்டன் (4), இயன் பெல்(4) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ரூட் மற்றும் டிராட் ஆகியோர் தலா 28 ரன்கள் சேர்த்தனர்.
 
 
 
அதன்பின்னர் சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 118 ரன்களும், மார்கன் 76 ரன்களும் விளாசினர். சமித் பட்டேல் (59), கேப்டன் பிராட் (6) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
 
மும்பை அணி தரப்பில் வெயிங்காங்கர், ஜாவீத்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தாக்கூர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். நாளை 2-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

ad

ad