புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012



ருவாண்டா இன படுகொலைக்கு தீர்வு கண்ட ஐநா ஏன் இலங்கை படுகொலைக்கு தீர்வு காணவில்லை! இன்னர் சிற்றி பிரஸ்
ருவாண்டா அரசு மீது அங்கு இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மக்களின் இனப் படுகொலைக்கு தீர்வு காண ஐநா முயன்றது போல் ஏன் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இலங்கை அரசு புரிந்த தமிழ் இனப் படுகொலைக்கு தீர்வு காணவில்லை என ஐநாவின் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ், ஐநா செயலர் பான் கீ மூனிடம் கேள்வி தொடுத்துள்ளது.
போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை காண ஏன் ஐநா நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அந்த ஊடகம் மேலும் கேள்வி மேல் கேள்வியால் பான் கீ மூனிடம் வேள்வி செய்துள்ளது.
ஐநாவின் உத்தியோகபூர்வ ஊடகமான இன்னர் சிற்றி பிரஸின் மேற்கண்ட கேள்வியினால் இலங்கை கடும் சீற்றத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என  இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவர் மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










ருவாண்டா அரசு மீது அங்கு இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மக்களின் இனப் படுகொலைக்கு தீர்வு காண ஐநா முயன்றது போல் ஏன் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இலங்கை அரசு புரிந்த தமிழ் இனப் படுகொலைக்கு தீர்வு காணவில்லை என ஐநாவின் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ், ஐநா செயலர் பான் கீ மூனிடம் கேள்வி தொடுத்துள்ளது.
போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை காண ஏன் ஐநா நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அந்த ஊடகம் மேலும் கேள்வி மேல் கேள்வியால் பான் கீ மூனிடம் வேள்வி செய்துள்ளது.
ஐநாவின் உத்தியோகபூர்வ ஊடகமான இன்னர் சிற்றி பிரஸின் மேற்கண்ட கேள்வியினால் இலங்கை கடும் சீற்றத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என  இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவர் மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad