புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012

த.தே.கூ வின் மூன்று பிரதிநிதிகள் திங்களன்று சீனாவுக்கு பயணம்
சீன அரசின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று நாளைமறுதினம் சீனாவுக்கு பத்து நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.


இந்தக் குழுவில் தமிழரசுக் கட்சியின் ஊடகச் செயலாளரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான திரு.ந.வித்தியாதரன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தலைவர் திரு. சோ.சுகிர்தன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட திரு. கிருஷ்ணபிள்ளை சேயோன் ஆகியோர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு ஆகியன தொடர்பான கொள்கை மற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு அரசியல் கலந்துரையாடல்களில் இந்தக் குழுவினர் பங்குபற்றுவர்.

இம்மாதம் 15ம் திகதி இக் குழு இலங்கை திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad