பாலச்சந்திரன் காணொளிக்காக காத்திருக்கும் ஜெயலலிதா
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பிறகு கருத்து தெரிவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா இன்று கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளையமகனான
12 வயதுடைய பாலச்சந்திரன் இலங்கை இராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்றதை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த புகைப்படம். மனித உரிமைகளை மீறிய இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில், பிரபாகரன் மகன் கொடூரமாக இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் இன்று(19) கருத்து கேட்டனர் சில நிருபர்கள். இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பிறகுதான் தன்னால் கருத்து வெளியிட முடியும் என்று கூறிவிட்டார்.