புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2013


இன்று மாலை ஜநா முன்றலில் பல தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு இளையோர் அமைப்பு சுவிஸ் கிளையின் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு 2:30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் சீமான் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் மற்றும் கட்சி செயற்பாட்டாளர் கிருஸ்ணா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக தமிழீழழ தேசியக் கொடியினை சுவிஸ் இளையோர் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் துவாரகன் ஏற்றிவைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.

சுடரேற்றலும் அதனை தொடர்ந்து முருகதாசன் திடலில் தமிழீழ மண் மீட்பு போரில் தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொது மக்கள் மற்றும் தமிழ் நாட்டில் ஈழவிடுதலைக்காக தம் உடலில் தீ மூட்டியவர்களையும் நினைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் மற்றும் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து உணர்வு நிறைந்த நினைவுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.


ad

ad