புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2013


ஈழத்தமிழருக்காக சென்னையில் நடந்த பட்டினிப் போராட்டத்தில் தலைவர்களின் (பழ.நெடுமாறன், வைகோ, நடிகர்கள் மன்சூரலிகான் ராதாரவி) காணொளி காட்சிகள் 

ஈழத்தமிழருக்காக சென்னையில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இன்று பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
1. ஈழத்தமிழர்கள், புலம்பெயர் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கு எடுக்க வேண்டும்.,சர்வதேச பன்னாட்டு  நிதிமன்றம்முன்  விசாரனை  நடத்தப்படவேண்டும் .
2. முள்வேலிக்குள் இருக்கும் மக்களையும் இராணுவ இரகசிய சிறையில் இருக்கும் ஈழப்போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
3. புனர்வாழ்வு என்ற பெயரில் நடத்தப்படும் கலாசார சீரழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. வடக்கு  கிழக்கு  பிரதேசங்களில்  உள்ள  இராணுவங்களை  உடனே  வெளியேற்ற வேண்டும
5.தமிழ்  பெண்கள்  மீதான  பாலியல் வன்கொடுமையை  நிறுத்த வேண்டும்.

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக அனைத்துக்கட்சிகளும் குரல் கொடுக்கும் நிலையினை தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் சுதந்திர தமிழீழம் மலர்வதை உங்கள் கண்களால் கண்டு உங்கள் தாயகத்திற்கு நீங்கள் திரும்பிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒன்றுபட்டு போராடுவோம் வெற்றி பெறுவோம் என்று சென்னையில் நடைபெற்ற தமிழகவாழ் ஈழத்தமிழர் பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பழ.நெடுமாறன் அவர்களின் உரையின் முழுமையான காணொளி:
பெரியாரும் நடிகவேளும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது: நடிகர் இராதாரவி

தந்தைப்பெரியாரும் நடிகவேள் எம்.ஆர்.இராதாவும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது. தமிழக தமிழர்கள் இப்பொழுதுதான் விழித்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் தமிழக தமிழர்கள் இன்னும் உறங்கவில்லை விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. தமிழீழ விடுதலை அடையாமல் உறங்கமாட்டோம்..வெற்றி நிச்சயம் என்று திரைப்பட நடிகர் இராதா ரவி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு எடுக்கக்கோரி தமிழக வாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் இன்று ஒரு நாள் பட்டினிப்போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் இராதா ரவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராதா ரவி அவர்களின் உரையின் முழுமையான காணொளி:
தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவாவிட்டாலும் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உதவுவதை நிறுத்தாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு கொள்ளி வைக்கும். அரசியல் கட்சிகளை கடந்து மாணவர்கள் பட்டாளம் இந்திய அரசினை தலைவணங்க வைப்பார்கள்.
விடியல் கண்ணுக்கு தெரிகிறது. உங்கள் காலத்தில் ஈழத்தை நீங்கள் காண்பீர்கள் என்று தமிழகவாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் நடத்திய பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ அவர்களின் உரையினை கீழே காணொளியாக காணவும்..

என் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் இந்திய அரசினை நான் வெறுக்கிறேன். இந்திய அரசினை வேரறுக்க வேண்டும்... மண்ணின் மைந்தர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று நடிகர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழகவாழ் ஈழத்தமிழர் பட்டினிப்போரில் கலந்துகொண்ட நடிகர் மன்சூரலிகான் தனது உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
மன்சூரலிகான் அவர்களின் உரையினை காணொளியாக காணுங்கள்..

ad

ad