புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013


மக்களை ஏமாற்ற எத்தனை நாடகங்களோ”.. கருணாநிதி குறித்து அதிமுகவின் டிஜிட்டல் பேனர்கள்


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து சென்னை முழுக்க அதிமுக சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்து அதை
நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புக் கொண்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தயார் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்து இருந்தார். ஆனால் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கருணாநிதியின் கோரிக்கை குறித்து சோனியா ஆலோசனை நடத்தினார். ஆனால் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படாததால் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி அடைந்த கருணாநிதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார். கருணாநிதியின் அறிவிப்பு குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடும் விமர்சனம் செய்தார். அதே போல பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை முன்னாள் மாநில செயலாளர் செந்தில்நாதன் என்பவர் சென்னை முழுக்க பல இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார். அதில், மக்களை ஏமாற்ற இன்னும் எத்தனை நாடகங்களோ என்ற தலைப்பிட்டு, ஆட்சியில் உள்ள போது தமிழர்களை கொள்ள துணை போவார், ஆட்சியில் இல்லாத போது தமிழர்களை கட்டிப்பிடித்து ஓட்டுக்காக அழுவார் என வாசகம் எழுதி வைத்துள்ளார். இந்த டிஜிட்டல் பேனர் வைத்தவர் கரூர் மாவட்டம், அவரக்குறிச்சி தொகுதியில், திமுக வேட்பாளரும், இந்தியாவின் பெரும் கோடீஸ்வர்களில் ஒருவருமான கே.சி.பழனிசாமியிடம் தோல்வி அடைந்த செந்தில்நாதன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிஜிட்டல் பேனரை வருவோரும், போவோரும் பார்த்து திமுக குறித்து கமெண்ட் அடித்த வண்ணம் செல்கின்றனர்.

ad

ad