புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013

பெண் எனும் பெருஞ்செல்வம்
சத்திரத்தில் சாமியார்
சமையலறையில் மாமியார்
உலகில் உன்னைவிட பாவியார்
உனக்குஏனம்மா இன்னுமொரு பாரதியார்

வேலையிலே எஜமான்
மாலையிலே உன்மான்(Man)
இப்படியே நீஏனம்மா அலைவான்
சபித்துவிடு இருவரும் தொலைவான்

இலக்கியத்தில் மட்டும்உனை பூவாய்
இல்லத்தில் எப்போதும்நீ நாராய்
மொத்தத்தில் நீபாலைவன தேராய்
எழுந்துவாம்மா ஆணுக்கு நிகராய்

நாட்டின் பெருஞ்செல்வம் நீயம்மா
நாவிழந்து நிற்பதுஉனக்கு தகுமா
நமக்கெல்லாம் நீதானே தாயம்மா
கூனிக்குறுகுவது நீஏனம்மா

விண்வெளியில் கால்பதித்தாய்
வீரமண்ணில் களம்பதித்தாய்
இன்னுமென்ன உறக்கமம்மா
கற்றுயர்ந்து ஆணையிடு ஆணையும் மிஞ்சிவிடு

நன்றி,
அ.பகீரதன்
http://pageerathan.blogspot.ca/

ad

ad