புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013

நவநீதம்பிள்ளை ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறார்-இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு விடுத்த அழைப்பை ஏற்றே நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வதாக இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 23 வது ஒழுங்குமுறை அமர்வின்போது இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் விஜயம், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உந்துதலை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நவநீதம்பிள்ளையின் விஜயம் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் இடையில் நற்புறவு ஏற்படும் என்றும் ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நவனீதம்பிள்ளை தலைமை தாங்கும் நிறுவனத்தில் நிதிச் சுயாதீனத்தன்மை கிடையாது - இலங்கை
நவனீதம்பிள்ளை தலைமை தாங்கும் நிறுவனத்தில் நிதிச் சுயாதீனத்தன்மை கிடையாது என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக நவனீதம்பிள்ளை கடமையாற்றி வருகின்றார்.
நாடுகளின் மனித உரிமை விவகாரத்தில் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் நவனீதம்பிள்ளை செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad