புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013

புலிகள் இருந்திருந்தால் கெடுபிடிகள் இடம்பெற்றிருக்கமாட்டாது! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்பந்தன்
விடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன. புலிகள் இன்று இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை.
எமது கோரிக்கை நியாயமானதும் நீதியானதும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கின்றது. எமக்கான தீர்வு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
எமது கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சிங்கள மக்கள் எம்மை நேசிக்கின்றனர். எங்களுக்கு தீர்வைத் தர தயாராக உள்ளனர்.
ஆனால் அரசியல் தலைவர்கள் தமது சுயநலனுக்காகவும் தமது பதவிகளுக்காகவும் எமது உரிமைகளை தர மறுக்கின்றனர்.
விடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன.
புலிகள் இன்று இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad