புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013



அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.

மொத்தம் உள்ள 150 தொகுதிகளில் 76 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும், வாக்குப் பதிவு முடிந்த பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆளும் தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டது, எதிர்க்கட்சிகள் கூடுதல் இடங்களைக் கைப்பற்றி வந்தன.
இந்நிலையில் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது, இதனையடுத்து புதிய பிரதமராக கட்சி தலைவரான டோனி அபட் தெரிவாகி உள்ளார்.
தற்போதைய பிரதமர் கெவின் ரூட் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் 6 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad