புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013




"அவர்களுக்கென்ன...
மகாராணிகள்!'


நடிகைகளின் வசதிகளையும், வாய்ப்பு களையும், புகழ் வெளிச் சத்தையும் பார்த்து ஈஸியாக சொல்லிவிடலாம்!

ஆனால் அடுத்தவரிடம் சொல்ல முடியாத அந்தப்புர அவஸ்தைகள் அந்த மகாராணிகளுக்கு நிறையவே உண்டு. சில நடிகைகள் வேண்டுமானால் இதிலிருந்து விதிவி லக்காக இருக்கலாம். ஆனால் பலருக்கும் இதுதான் விதி! விலக விரும்பினாலும் வீடு விட்டு வைக்காது.

"உடல் பெருத்துவிடும், மார்க்கெட் படுத்துவிடும்' எனச் சொல்லி... தின்ன விரும்பியதைக் கூட உண்ணவிட மாட்டார்கள். "இங்க தூங்கறதுக்கு அங்க தூங்கினா துட்டு வருமே!' என வலிக்க வலிக்க வழிப்பறி ரேஞ்சுக்கு வதைக்கிற குடும்பங்களும் உண்டு. "மாஸ் இருக் கிறவரைக்கும்தான் கேஷ்!' எனச் சொல்லி சுற்றம் சூழ்ந்து கொண்டு "மாசு' படுத்திவிடும் நடிகையின் மனசையும், உடலையும்.

"அந்த நடிகையும் அப்படித்தான் மாசுபடுத்தப்பட்டுவிட்டார். இந்த மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பாருங்கள்!' என சினிமா நண்பர் ஒருவர் ஃபைலை நீட்ட... வாங்கிப் பார்த்த நமக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இறகுகளை முதன்முதலாக விரிக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சியின் லார்வா பருவத்திலிருந்த அந்தப் பெண்ணை சினிமாவில் நடிக்க வைக்க வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார் வளர்த்த தாய்.

வாய்ப்புகள் தேடி வந்தாலும் கண்டிஷன்ஸ் அப்ளை... என்கிற கடும் விதி இருந்தது. சின்னப் பெண் என்பதால் அதற்கு உடன்படாத அம்மா கண்டிஷன்களுக்கு தான் உடன்படுவதாகச் சொன்னார். இதனால் வந்த பட வாய்ப்புகள் விலகிப் போனது. இந்த உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்ட ஒரு டைரக்டரின் படத்தில் அந்தப் பெண் சேதாரமில்லாமல் நாயகியானார். படத்தின் காதல் காட்சிகளில் கூட கதாநாயகன் அந்தப் பெண்ணை கட்டிப்பிடிக்காதவாறு பார்த்துக் கொண்டார் டைரக்டர். அதனால் அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு பாத்திரமானார்.

ஆனால் அந்தப் படம் கால்வாசி படப்பிடிப் புடனேயே கவிழ்ந்து போனது. இப்படி சில கசந்த அனுபவங்களுக்கு மத்தியில் அந்தப் பெண்ணின் அம்மாவுக்கும் டைரக் டருக்குமான நட்பு இனித்தபடி இருந்தது.

தன் வீட்டுத் தெருவில் போகும் போதும் வரும் போதும் குழந்தை களிடம் குறும்புத் தனம் செய்தபடி போன அந்தப் பெண்ணின் துறுதுறுப்பைப் பார்த்த இன்னொரு டைரக்டர் தமிழ் கற்க வைத்தார். அந்தப் படம் வெளியாகி ஒரே நாளில் திறமையான, இளமையான நடிகையாக அறியப்பட்டார்.

ஆடு குட்டியா இருக்கும் போது கூறு போட்டா தேறாது... பெருத்தாத்தான் கறி நிறையா கிடைக்கும்...னு திட்டம் போட்ட மாதிரி நடிகையை கரன்சி மெஷி னாகவே பார்த்தார் நடிகை யின் அம்மா. நடிகையின் விருப்பத்தை மீறி வெளி புரோக்ராம்கள் போடப் பட்டன.

ஹோம்லியான தோற்றமும், இமேஜும் உள்ள நடிகைகள் மீது பொதுவாகவே மற்றவர் களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். இந்த நடி கையும் ஹோம்லியான அம்சம் உடையவர். பல படங்களில் கதாநாயகனை தெனாவெட்டாக மிரட்டி, துடுக்குத்தனம் செய்து காதலிப்பவராக நடித்திருப் பார். இதனால் வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடும் வசதியான இளைஞர் களுக்கு இவர் மீது ரொம்பவே கிரேஸ்.



கிழக்கு கடற்கரைச் சாலை யில் பல தனி பங்களாக்களில் நடக்கும் பார்ட்டிகளுக்கு வீட்டா ரால் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டார் இந்த நடிகை.

எங்கயும் எப்பவும்... ஏன் அக்கம் பக்கத்தில், கடைவீதிகளில் பார்க்கிற தோழமையான தோற்றத்துடன் சிறப்பாக நடிப்ப        தால் சினிமா புள்ளிகளுக்கும் நடிகை மீது பிரியம் வந்தது.

"ஃபுரூட்' டைரக்டர் ஒரு முறை நடிகையிடம் லவ் புரப்  போஸ் பண்ணினார். இதை யறிந்த அம்மா ஆவேசப்பட "ஃபுரூட்'டை மிரட்டி வைத்தார் இந்த டைரக்டர். "வெற்றி'யைக் குறிக்கும்  ஹீரோ இதேபோல் நடிகையிடம் "லவ்'வாக... அவரையும் மிரட்டினார் இந்த டைரக்டர்.

தன் சம்பாத்யம் முழுவதையும் அவர்களே வைத்துக் கொண்டதோடு அடி-உதையும் கொடுத்தார்கள். புகழ் தன்னிடம் இருந்தும் புகலிடம் இல்லாதவராக இருந்தார் நடிகை.

எல்லாச் சமயமும் ஒரே சமயம் போல் இருக்காதே. ஆளுக்கொரு வாய்ப்பு அமைந்தே தீரும்! நடிகைக்கும் அமைந்தது. பெரிய வீட்டு அரசியல் புள்ளியின் மருமகன் பார்ட்னராக இருந்து தயாரித்த படத்தில் நடித்தார் இந்த நடிகை. அவரின் அபிமானத்தைப் பெற்றார்.

"விடுதலை'யான கட்சித் தலைவர் பெயரைச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்த டைரக்டரை "மருமகன்' செல்வாக்கை வைத்து பதிலுக்குப் பாய்ந்தார் நடிகை.

இந்நிலையில் தெலுங்கு ஹீரோ ஒருவரின் சப்போர்ட்டும் கிடைக்க... குடும்பத்தாருடன் குஸ்தி போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை.

விரும்பியோ... விரும்பாமலோ சில அட்ஜஸ்ட்மெண்ட்டுகள் இருப்பதால் பொது வாகவே நடிகைகள் அடிக்கடி செக்-அப் செய்து கொள்வார்கள். அப்படி ஒருமுறை செக்-அப் செய்து கொண்ட போதுதான் ரத்தப் பரிசோதனையில் இந்த நடிகைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நடிகையுடன் சட்டப் போராட்டம் நடத்திய அம்மா தன் மகளுக்கு சினிமாவில் இருக்கும் பெயர் தவிர மேலும் இரண்டு இயற்பெயர்களும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்தச் சமயம் மீடியாவிடமும் "அவளுக்கு வியாதி இருக்கிறது. தவறாமல் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நம் சினிமா நண்பர் கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட்டில் சினிமா பெயர் மற்றும் இரண்டு இயற்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த ரிப்போர்ட்டை இரண்டு முன்னணி மருத்துவர்களிடம் கொடுத்தோம்.

"இந்த ரிப்போர்ட்படி, இந்த பேஷண்ட்டுக்கு அந்த வியாதி இருக்கிறது' என்றார்கள்.

மீண்டும் மற்றொரு மருத்துவரிடம் இந்த ரிப்போர்ட்டை கொடுத்தோம்.

"இதில் குறிப்பிட்டிருப்பது அந்த நடிகைதான் என்றால்... என் நண்பரான ஒரு மருத்துவரிடம் லிபோஷக்ஷன் ட்ரீட்மெண்ட்டுக்கு நாலைந்து மாதம் முன்பு வந்தார். அவரிடம் விபரம் கேட்டுச் சொல்கிறேன்' எனச் சொல்லி அதன்படி கேட்டுச் சொன்னார்.

"இடுப்பு, தொடை, கால் பகுதிகளில் கொழுப்பு அதிகமாக சேர்ந்தால் ஊசி மூலம் அந்த இடங்களில் உள்ள கொழுப்பை உறிஞ்சி வெளியே எடுப்பதுதான் "லிபோஷக்ஷன்' ட்ரீட்மெண்ட். நடிகைகள், பணக்காரப் பெண்கள் பலரும் என் நண்பரிடம் சிகிச்சை பெற்றவர்கள்தான். இந்த நடிகைக்கும் சிகிச்சை செய்திருக்கிறார். இந்த சிகிச்சை செய்வதற்கு முன் முழு உடற்பரிசோதனை, ரத்தப் பரிசோதனை கட்டாயம் செய்யப்படும். அப்படி இந்த நடிகையை பரிசோதித்தபோது அந்த நோய் பாதிப்பு அவருக்கு இல்லை... என  நண்பர் தெரிவிக்கிறார்' என்றார் நாம் சந்தித்த மருத்துவர்.

நம்புவோம். எல்லா வகையிலும் நலம் பெற வாழ்த்துவோம்.

ad

ad