புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014

வலி. கிழக்கு வரவு - செலவுத் திட்டம் வர்த்தமானி ஊடாக நடைமுறைக்கு; நடவடிக்கை எடுத்தார் வடக்கு முதலமைச்சர் 
வலி.கிழக்குப்  பிரதேச சபையின் வரவு  செலவுத் திட்டத்தை சபையின் செயலாளர் ஊடாக  நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வர்த்தமானி
மூலம் அறிவித்துள்ளார்.

வலி.கிழக்குப் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டம் சபையில் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது.  இதனால் தவிசாளர் அ.உதய குமார் பதவியிழந்திருந்தார்.

 அத்துடன் வரவு  செலவுத் திட்டம்  நிறைவேற்றப்படாமையால்  ஊழியர்களுக்குரிய கடந்த மாதச் சம்பளம் வழங்குவதிலும் இடர்கள் ஏற்பட்டிருந்தன. இறுதியில் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர்  அலுவலகத்தினூடாக  ஊழியர்களுக்குரிய  சம்பளம் வழங்கப்பட்டிருந்தது.

 ஆனாலும் இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இந்த நிலையில் கடந்த  7 ஆம் திகதி 1848/31 ஆம் இலக்க வர்த்தமானி  மூலம், 2014 ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்  அதிகாரத்தை  செயலாளரிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கையளித்துள்ளார்.
                                         
 

ad

ad