புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

முல்லைதீவு வித்தியானந்தா கல்லூரி 233 ஒட்டங்களால் வெற்றி. - Video

முல்லைதீவு மாவட்டத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலத்திற்கும் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட்
போட்டியில் வித்தியானந்தா கல்லூரி 233 ஒட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
50 ஓவர்களைக் கொண்ட இக் கிரிக்கெட் போட்டி மார்ச் 15ஆம் திகதி இப்போட்டிக்காக புனர் நிர்மாணம் செய்யப்பட்ட முல்லைதீவு நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. 
இக் கிரிக்கெட் போட்டியை இராணுவத்தின் 591 ஆவது படை பிரிவு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வித்தியானந்தா கல்லூரி 298 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது
வித்தியானந்த அணி சார்பாக அணித்தலைவர்  அருணோதயன் அஞ்சயன்  128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்
299 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்படுத்தாடிய முல்லைத்தீவு மகா வித்தியாலய அணி 65 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. 
போட்டியின் ஆட்டநாயகனாக வித்தியானந்தா கல்லூரி மாணவன் அருணோதயன் அஞ்சயனும், சிறந்த பந்துவீச்சாளராக பரம குரு அருனவும் தெரிவானார்கள்.
இக் கிரிக்கெட் போட்டிக்கு பிரதம அதிதியாக முல்லைதீவு மாவட்ட மேஜர் ஜெனரால் N.A.G டயஸ் அவர்களும், மாவட்ட செயலாளர் M. வேதநாயகம், முல்லைதீவு கல்வி பணிப்பாளர் N. ராஜ்குமார், முல்லைத்தீவு மகா வித்தியால அதிபர் எல்பட், வித்தியானந்தா கல்லூரி அதிபர் K. சிவலிங்கம் உட்பட பிரதேச வாழ் மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். 

ad

ad