புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014


சுழிபுரத்தில் இளம்பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு - நல்லூரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட சுழிபுரம் மத்தி, சுழிபுரம் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் வைத்து தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக, குறித்த சிறுமி,  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இச்சிறுமி 11 ஆம் தரத்தில் கல்வி பயன்று வருவதாகவும், தான் அருகில் உள்ள கடைக்கு செல்லும் போதெல்லாம் சந்தேக நபர் தன்னிடம் கதைப்பதற்காக தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி பாடசாலை விட்டு வீடு வந்து பகலுணவு உட்கொண்ட தன் பின்னர், வீட்டில் எவருமில்லாத சமயம் மேற்படி நபர், தன் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து எவரிடமும் கூற வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றதாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதிதான் பாடசாலை சென்று திரும்பும் போது தன்னை இடைமறித்து அருகிலுள்ள பாழடைந்த காணிக்குள் தன்னைக் கொண்டு சென்று
மீண்டும் பாலியல் உறவுக்கு உட்படுத்த முயன்ற போது அந்நபரிடம் இருந்து தப்பியோடி வந்துவிட்டதாகவும் இவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

ad

ad