புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014

மோடி முன்னிலையில் ஆங்கிலத்தில் பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த்!

சேலம்: சேலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி கலந்து கொண்ட பிரசாரத்தின்போது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா ஆங்கிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.


தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதையடுத்து இன்று மாலை கிருஷ்ணகிரி வந்த மோடி, அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதையடுத்து, சேலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் சுதீஷை ஆதரித்த பிரசாரம் மேற்கொள்ள சேலம் வந்தார்.

இந்த பிரசார கூட்டத்தில் முதலில் உரையாற்றிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா,  முதலில் ஆங்கிலத்தில் பேசினார். மீண்டும் அதே உரையை தமிழிலும் பேசினார்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியதாக தே.மு.தி.க. தொண்டர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், அதன் பிறகு உரையாற்றிய விஜயகாந்த் தமிழில் மட்டுமே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad