களியக்காவிளையில் ராதா கிருஸ்ணனுக்கு அமோக வரவேற்பு
கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கனரக தொழிற்சாலைகள்
மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் இணை மந்திரியாக பதவியேற்றார்.
மத்திய மந்திரியாக பதவியேற்ற பிறகு அவர் முதன்முறையாக இன்று தனது சொந்த ஊரான குமரி மாவட்டம் வந்தார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு கேரள மாநில பாரதீய ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான களியக்காவிளையில் பாரதீய ஜனதாவினர் திரண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிர்வேட்டுகள், செண்டை மேளம் முழங்க பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். அங்கு திரண்டு இருந்த பாரதீய ஜனதாவினருக்கும், பொதுமக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து பேசினார்.