உண்ணாவிரதம் வாபஸ்: இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்கள் என தகவல்?
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 3 மாதங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட மீனவர்களை, துணை தூதரக அதிகாரி மூர்த்தி சந்தித்து பேசினார்.
அப்போது மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், சிறைப்பிடிக்கப்பட்ட 85 படகுகளும் விடுவிக்கப்படும் என்று உறுதி அளித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்தநிலையில் மீனவர்கள் இன்று விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்ப்படுகிறது.