புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

அகதிகளுக்கான தற்காலிக வீசா வழங்கப் போகிறது அவுஸ்திரேலியா 
அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
 
இது தொடர்பான திருத்தச் சட்டம் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன.
 
எனவே புதிய விதிகளின்படி தஞ்சம் கோரும் அகதிகள் 3 தொடக்கம் 5 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். அத்துடன் இவர்கள் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும்.
 
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று பப்புவாநியூகினி, நவ்றூ தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான அகதிகள் அந்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ad

ad