புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

காணாமல் போனோர் குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி ஐ.நா.வுக்கு கடிதம்

காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் த
லைவர் அருட்பணி செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழு, யாழ். மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, வடக்கு காணாமல் போனோரின் உறவுகளை தேடும் சங்கம் ஆகியன இணைந்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையாளருக்கு இந்த கடிதத்தை நேற்று அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பாக நம்பகத்தன்மையற்ற உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் அதனால், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செபமாலை அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad