புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2015

பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் பெல்ஜியத்தில் கைது


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் வைத்து
செய்து செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சின் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் பயங்கர தொடர் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான பட்டாகிளான் அரங்கத்திற்கு அருகே நின்ற கார் ஒன்று, பெல்ஜிய நாட்டின் பதிவுத் தகட்டுடன் காணப்பட்டதை அவதானித்த  காவல்த்துறையினர், விரைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் பின்னர் இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது செய்யப்பட்டதாக பெஜ்ஜியம் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் இருந்துள்ளார் என பெல்ஜியப் பிரதமர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மிகக் கொடூரமான இத்தாக்குதல்களை நடத்தியவர்களில் ஒருவர் பாரிஸின் புறநகர்ப்பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் கடந்த காலத்தில் குற்றச் செயல்கள் புரிந்துள்ளதற்கான பதிவுகள் உள்ளன என்றும் பிரான்ஸ் அரசின் தலைமை வழக்கறிஞர் பிரான்சுவா மொலீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மற்றொரு தாக்குதலாளி சிரிய நாட்டு கடவுச் சீட்டு வைத்திருந்தார் எனவும் பிரெஞ்சு அரச தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தாக்குதல்தாரிகளும் தானியங்கி கலாஷ்னிகோவ் துப்பாக்கியை வைத்திருந்ததுடன் தற்கொலை அங்கியும் அணிந்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இத்தாக்குதல் பிரான்ஸின் மீது நடத்தப்பட்ட ஒரு போர் என்றும், தமது அரசு ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதலை நடத்தும் எனவும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸுவா ஒலாந் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பிரான்ஸ் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ad

ad