பீப் பாடல் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக, 3 பிரிவுகளின் கீழ் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர். - ஐ ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சிம்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து ஜனவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.