புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அரையிறுதியாட்டமும் இறுதியாட்டமும்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக், தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுத்துவரும் 5 வீரர்கள் பங்குபற்றும்
கால்;பந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டங்களும், இறுதி ஆட்டமும் நாளை ஞாயிற்றுக்கிழமை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

மாலை 3 மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் உடுத்துறை செந்தமிழ் அணியை எதிர்த்து சக்கோட்டை சென்.சேவியர் அணி மோதிக் கொள்ளும். தொடர்ந்து 3.30 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பலாலி விண்மீன் அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதிக் கொள்ளும். அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி அடையும் அணிகள் 4 மணிக்கு இடம்பெறும் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் மோதவுள்ளன. அரையிறுதி ஆட்டங்களில் வெற்றிபெறும் அணிகள் மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.

ad

ad