தமிழக அமைச்சரவையில் இருந்து பி.வி.ரமணா நீக்கப்பட்டுள்ளார். ரமணா வகித்து வந்த பால்வளத்துறையை அமைச்சர் மோகன் கூடுதலாக கவனிப்பார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருவள்ளுர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் ரமணா நீக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படும் வரை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் கவனித்துக்கொள்வார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
திருவள்ளுர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினரான பி.வி.ரமணா, அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவது இரண்டாவது முறையாகும்.