புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2016

நடிகர் சாய்சக்தியை தற்கொலையில் இருந்து மீட்ட நண்பர்கள்

டி.வி. தொடர்களில் நடித்து வந்த நடிகர் சாய் பிரசாத் குடும்ப பிரச்சினை காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது டி.வி. ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மற்றொரு டி.வி. நடிகர் சாய்சக்தி தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்கான காரணம் குறித்து அவர் கதறி அழுது புலம்பிய ‘ஆடியோ’ பதிவு வாட்ஸ்-அப்-ல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர் பேசி இருப்பதாவது:-  ‘’வணக்கம் நான் நடிகர் சின்னத்திரை சாய் சக்தி பேசுகிறேன். உங்கள் எல்லோருக்கும் தெரியும் நான் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில், தொடர்களில் படங்களில் நடித்திருக்கிறேன். நான் மிகவும் மனவேதனை அடைந்து தற்கொலை செய்யும் அளவுக்கு வந்து விட்டேன். காரணம் இரண்டு வருடமாக என் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன்.

எனக்கென்று உதவி செய்ய யாரும் வரல. காரணம் என்ன என்று நினைக்கிறீங்க... இன்று டி.வி. கலைஞர்கள் நிறைய பேர் இறந்து கொண்டே இருக்கிறோம். கஷ்டத்தில் இருந்த சாய்பிரசாத் இறந்து விட்டார். அடுத்தது சாய்சக்தி நிலைமை என்னன்னு கேளுங்க.

மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு, மனசு ரொம்ப வலிக்குது. நான் நிறைய தொடர்களில் நடித்திருக்கிறேன். நாதஸ்வரம் என்ற தொடரில் நடித்தேன். பின்னர் இன்னொரு டி.வி.யில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு சென்றேன். தொடர்ந்து வாய்ப்பு அளிப்பதாக அவர்கள் உறுதி கூறினார்கள். ஆனால் என்னை ஏமாற்றி மூளைச்சலவை செய்து குழப்பி இன்று என்னை நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

இன்று எனக்கு வருமானம் இல்லை. என்னை நம்பி மனைவி, குழந்தை குடும்பம் இருக்கிறது. இவர்களுக்கு யார் உதவி செய்வார்கள். நான் என்ன செய்வேன். இப்போது நான் நடுத்தெருவில் நிற்கிறேன். 17 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். முதலில் நடித்த டி.வி.யிலும் பின்னர் நான் சென்ற டி.வி.யிலும் பல முறை படியேறி வாய்ப்பு கேட்டேன். காலில் விழுந்து கதறி அழுதேன். பிச்சை எடுக்காத குறையாக படியேறி இறங்கினேன்.

ஒரு நடிகர் நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இதனால் மனம் நொந்து தற்கொலை முயற்சியில் இறங்கி சாக முயன்றேன். ஆனால் அதை என் அம்மா தடுத்து என்னை அடித்து அப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

எனக்கு தொடர்ந்து வாய்ப்பு இல்லை. வருமானம் இல்லை. வாழப் பிடிக்கவில்லை. மீண்டும் தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நீங்கள் தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும். எனக்கு நடிப்புதான் சாப்பாடு போடும் என்று நினைத்தேன். இந்த டி.வி.க்களை நம்பி இன்று பல கலைஞர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். நாங்கள் ஏழை.

நடிப்பு தான் எங்கள் தொழில், அதை நம்பிதான் கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தோம். இப்போது கடைசியில் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா?

எனக்கு இந்த உலகத்துல வாழ்வதற்கே இஷ்டம் இல்லேங்க (கதறி அழுகிறார்) சத்தியமா சொல்றேங்க எனக்கு லைப் இனி தேவை இல்லை. என்னால முடியல்ல. டி.வி.காரர்களை நம்பி செத்தே போயிட்டேன்.’’

- இதை கேட்ட நண்பர்கள் சாய்சக்தியை அவரது சகோதரி மூலம் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தி உள்ளனர். இதனால் அவர் தற்கொலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

ad

ad