புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2016

குஷ்பு பிரசாரத்துக்கு காத்திருந்த தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து பலி

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வே
ட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை, ஒரகடம், வல்லக்கோட்டை, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படப்பை பகுதியில் அவர் மாலை 6 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக படப்பை பகுதியில் மாலை 5 மணிக்கே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். இவர்கள் மாலை 6.30 மணி வரை காத்து இருந்தனர்.

அப்போது குஷ்பு வருகைக்காக காத்திருந்த தி.மு.க. தொண்டரான கீழ்படப்பை பகுதியைச் சேர்ந்த பூபதி(வயது 55) என்பவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில் நடிகை குஷ்பு ஆலந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து பிரசாரம் செய்து விட்டு குன்றத்தூர் வந்து அங்கிருந்து இரவு 8.30 மணியளவில்தான் மணிமங்கலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

படப்பையில் தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து இறந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் அங்கு திரண்டிருந்த தொண்டர்களும் கலைந்து செல்ல தொடங்கியதாலும், நேரம் ஆகிவிட்டதாலும் குஷ்பு, படப்பையில் பிரசாரம் செய்யாமல் மணிமங்கலத்தில் இருந்து நேராக சுங்குவார்சத்திரத்தில் பிரசாரம் செய்ய சென்று விட்டார்.

ad

ad