ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று
மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரியும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சிவராம் மற்றும் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்காக அரசாங்கத்திடம் நீதி கோரியும் சிவராம் படுகொலை வழக்கை மீள ஆரம்பிக்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.