தேர்தல் பிரசாரத்தில் கட்சித்தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார்.
கோட்டூர்புரம் பாலம் அருகே ஜெயலலிதாவின் கார் சென்ற போது, அங்கு 25 முஸ்லீம் பெண்கள் உள்பட 75 பேர் நின்றனர். அவர்களைப் பார்த்ததும் நடுரோட்டில் காரை நிறுத்தினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.வின் உறுப்பினரும், நடிகருமான பஷீர் என்ற விஜய்கார்த்திக் மற்றும் வேளச்சேரி பள்ளிவாசலை சேர்ந்த அபு ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் அருகே சென்றனர்.
அப்போது விஜய்கார்த்திக், ஜெயலலிதாவுக்கு குரானை பரிசாக கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட அவர், 'இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்' என்றார்.
கோட்டூர்புரம் பாலம் அருகே ஜெயலலிதாவின் கார் சென்ற போது, அங்கு 25 முஸ்லீம் பெண்கள் உள்பட 75 பேர் நின்றனர். அவர்களைப் பார்த்ததும் நடுரோட்டில் காரை நிறுத்தினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.வின் உறுப்பினரும், நடிகருமான பஷீர் என்ற விஜய்கார்த்திக் மற்றும் வேளச்சேரி பள்ளிவாசலை சேர்ந்த அபு ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் அருகே சென்றனர்.
அப்போது விஜய்கார்த்திக், ஜெயலலிதாவுக்கு குரானை பரிசாக கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட அவர், 'இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்' என்றார்.