முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக சிறிகொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் எதிர்வரும் வியாழக்கிழமையன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன