வட மாகாணத்தில் இன்று காலை முதல் தனியார் பேரூந்து சேவைகள் இடம்பெறாமல் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த போராட்டம் பிற்பகலுடன் நிறுத்தப்பட்டது.
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்களுக்கும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேக்கும் இடையே யாழில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும் கலந்து கொண்டார்.
இ.போ.ச.வினர், இணைந்த நேர அட்டவணையை மீறுவதாக தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இரண்டு வார கால அவகாசத்தை ஆளுநர் மற்றும் வட மாகாண அமைச்சர் கோரியிருந்தனர்.இதனையடுத்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.