புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

இங்கிலாந்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஈழத்து இளைஞர்களில் இருவர் சகோதரர்கள்!

இங்கிலாந்தில்  கடலில் மூழ்கி உயிரிழந்த ஈழத்து இளைஞர்களில் இருவர் சகோதரர்கள்!
பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத் தமிழர்களில் இருவர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் நால்வர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், ஒருவர் 27 வயதானவர் எனவும் தெரியவந்துள்ளது.
லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து ஹம்பர்சான்ட் கடற்கரைக்குச் சென்ற குறித்த ஐந்து பேரும் கடற்கரையில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது திடீரெனக் கடல் மட்டம் மிகவேகமாக உயர்ந்து அவர்களை கடலுக்குள் இழுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த ஐவரினதும் அடையாளம் உறுதி செய்யப்பட்டதன்படி படி 22 வயதான நிதர்சன் ரவி, 23 வயதான இந்துசன் சிறிஸகந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் நாதன் மற்றும் 27 வயதான குருசாந் சிறிதவராஜாஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்தவர்களில் கோபிநாதன் மற்றும் கெனிகன் நாதன் ஆகியோர் சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad