புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2017

மின்சார ரயிலில் பயணம் செய்த போது, தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரங்களில் அலுவலக மற்றும் பள்ளி, கல்லூரி நேரங்களை
ஒட்டி ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அதில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் பரங்கிமலை, பழவந்தாங்கல் இடையே சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் ஏராளமானோர் படிக்கட்டுகளின் பயணம் செய்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக சிலர் ரயிலில் இருந்து தவறி விழுந்தனர்.
அதில் 3 பேர் தண்டவாளத்தில் விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ad

ad