புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2018

மனித புதைகுழி அகழ்வு பணிகளை பிரித்தானி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

குறித்த இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் நேரடியாக விஜயம் செய்து அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘சதொச’ வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 115ஆவது நாளாக இன்று சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.இதுவரையில் 266 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அகழ்வுப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில் அகழ்வுப் பணியை நேரடியாக பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் இன்று அகழ்வு இடம்பெறும் பகுதிக்குச் சென்று நேரடியாக அகழ்வுப் பணிகளை அவதானித்ததோடு, குறித்த மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவிடம் கேட்டறிந்துகொண்டனர்.

இதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் மனித புதைகுழியை பார்வையிட வந்தபோது புலனாய்வுத்துறையினர் பலர் குறித்த பகுதியை சூழ்ந்துகொண்டதோடு, கையடக்கத் தொலைபேசிகளில் ஒளிப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது

ad

ad