புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2022

உலககோப்பை கால்பந்து 2வது சுற்று: அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து

www.pungudutivuswiss.com
அமெரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது. தோகா, உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. அதில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின.தொடக்கம் முதல் ஆதிக்கம் செலித்திய நெதர்லாந்து அணியின் மெம்பிஸ் டேபே 10வது நிமிடத்தில் கோல் அடித்தார்.தொடர்ந்து 45வது நிமிடத்தில் டேலி பிளின்ட் கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் 76வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் ஹஜி ரைட் கோல் அடித்தார். பின்னர் 81வது நிமிடத்தில் நெதர்லாந்து டென்சல் டம்ப்ரைஸ் கோல் அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் 3 -1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.இதனால் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.

ad

ad