புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2022

உலகக் கிண்ண வலைப்பந்து; இலங்கை அணி 'சி' குழுவில்

www.pungudutivuswiss.com

தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சி குழு இடம்பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறும் வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்திற்கான குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சி குழுவில் இலங்கை அணி இடம்பெற்றுள்ளதுடன், இந்த குழுவில் உலக தரவரிசையில் 4ஆவது இடத்தை பிடித்துள்ள ஜமைக்கா, தொடரை நடத்தும் மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் 9ஆவது இடத்தில் உள்ள வேல்ஸ் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

இலங்கை அணி தற்போது சர்வதேச தரவரிசையில் 16ஆவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பு ஆசிய சம்பியனான இலங்கையின் மிகச்சிறந்த தரவரிசை இடமாகவும் இது அமைந்துள்ளது.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் 16 அணிகள் பங்கேற்பதுடன், அவைகள்; நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ குழுவில் அவுஸ்திரேலியா, டொங்கா, சிம்பாப்வே மற்றும் பீஜி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பி குழுவில் இங்கிலாந்து, மலாவி, ஸ்கொட்லாந்து மற்றும் பார்படோஸ் அணிகள் இடம்பிடித்துள்ளதுடன், டி குழுவில் நியூசிலாந்து, உகண்டா, ட்ரினிடேட் மற்றும் டொபேகோ மற்றும் சிங்கபூர் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடர் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad