புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2022

சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமை!

www.pungudutivuswiss.com


தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

    

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்த வடக்கு,கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து கருத்து வெளியிடும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளர். இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்த் தரப்புக்கள பங்கேற்பது மிகவும் முக்கிமானது. ஆனால், பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு முன்னதாக, இணைந்த வட,கிழக்கு உட்பட சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்ற விடயத்தினை அத்தரப்பு பிரதானமாக முன்வைத்துள்ளது.

இது, பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண சமிக்ஞை வெளிப்பாடுகளை பின்னயைச் செய்வதற்கான முயற்சியாகும். ஆகவே,தமிழ்த் தரப்பு இவ்வாறு பகிரங்கமான நிபந்தனைகளை விடுத்து, பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று,அதன் பின்னர் சில விடயங்களை முன்வைக்க முடியும்.

அதில் மிக முக்கியமாக, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல், அதற்கு அடுத்தபடியாக, இந்தயாவின் முறைமையை பின்பற்றி இறுதித் தீர்வினை காணுதல் உள்ளிட்ட படிநிலைமைகளில் செல்ல முடியும்.

ஏனென்றால், ஆரம்பத்திலேயே தென்னிலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் தமிழ்த் தரப்பு நிபந்தனைகளை விதித்தால்,அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தும். அதேநேரத்தில் ஆட்சியில் உள்ள தரப்பினரும், ஆதரவினை விலக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமில்லை.

ஆகவே, பேச்சுக்களை ஆரம்பிக்கும்போது, கடுமையான விடயங்களை முன்வைப்பதான, ஏற்கனவே ஒற்றையாட்சி முறைமை என்றால் சந்தேகப்படும், தமிழர்களும், சமஷ்டி என்றால் தென்னிலங்கை சிங்களவர்களுக்கும் கடுமையான எதிர்ப்போக்கான நிலைமையே உள்ளது. எனவே, அவ்விதமான சூழுல் உருவாகுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்

ad

ad