
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர்.

குராசோ முதல் முறையாக உலகக்
![]() வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார் |
![]() நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
![]() தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை |
Co-hosts: Canada, Mexico, USA AFC: Australia, IR Iran, Japan, Jordan, Korea Republic, Qatar, Saudi Arabia, Uzbekistan CAF: Algeria, Cabo Verde, Côte d'Ivoire, Egypt, Ghana, Morocco, Senegal, South Africa, Tunisia CONMEBOL: Argentina, Brazil, Colombia, Ecuador, Paraguay, Uruguay OFC: New Zealand UEFA: England, France, Croatia, Germany, Netherlands, Norway, Portugal (34 of 48 teams).


![]() திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். |
![]() சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் திங்கட்கிழமை(17) அமைதியின்மை ஏற்பட்டது |
![]() திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை, அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, இன்று பிற்பகல் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது |
![]() யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட சிங்கள மாணவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (16) யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது |
![]() திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். |
![]() இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,
![]() வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் |

![]() நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. |
![]() மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது |
![]() மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு தெரிவுக் குழுவை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
| அடுத்தவாரம் தமிழரசு கட்சியை சந்திக்கிறார் ஜனாதிபதி அனுர! [Saturday 2025-11-15 16:00] |
![]() தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரியவருகிறது |
ஒரு மாற்றம் வரப்போகிறது. நாங்கள் அ

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலி
![]() பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார். |
