புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012

சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழீழ எல்லாளன் படை
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழ எல்லாளன் படை அறிவித்துள்ளது.  ellalanforceoftamileelam1@gmail.comஎன்ற மின்னஞ்சல்
கணக்கிலிருந்து இந்த செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு
அன்பார்ந்த புலத்தில் உள்ள தமிழ் செயல்பாட்டாளர்களுக்கும் புலத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் தமிழீழ எல்லாளன் படை விடுக்கும் அவசரமானதும் அவசியமானதுமான கோரிக்கை.
தாயகத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு தலைமைகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பின்னர் புலத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கருத்துக்கள் தரிவிப்பதும் நிகழ்வுகள் நடத்துவதும் கடந்தகால போராட்டத்திற்கும் தமிழினத்திற்க்கும் மிகப்பெரும் இழிவாக உள்ளது தங்களிடம் உள்ள சொத்துக்களை முடக்குவதற்காக பொய்யான செய்திகளை பரப்புவதும் மக்களைக்குழப்புவதும் துரோகப்பட்டம் வழங்குவதும் எல்லைதாண்டிச்செல்கிறது எனவே இவை அனைத்தையும் உடனடியாக நிறுத்திக்கொள்ளவும்.
குறிப்பாக 31.12.2012க்கு முன்னதாக தங்களின் கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு கண்டு ஒரு குடையின் கீழ் செயல்பட வேண்டுகிறோம். தொடர்ந்தும் புலத்திலுள்ள சட்டப்போர்வையின் துணிச்சலில் தங்கள் நடவடிக்கைகள் தொடருமாயின் நிர்வாகரீதியாக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
தமிழீழ எல்லாளன் படை

ad

ad