புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013



மீண்டும் அதிமுகவில் சேருவதற்காக கடிதம் எழுதியிருக்கிறேன் : எஸ்.வி.சேகர் 
நடிகர் எஸ்.வி. சேகர் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,  ‘’நான் மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து கட்சி தலைமைக்கு 3 மாதங்களுக்கு முன்பு கடிதம் கொடுத்தேன்.

விரைவில் நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். மார்ச் மாதம் காங்கிரசில் சேர்ந்தேன். மே மாதம் என்னை தங்கபாலு நீக்கினார். பின்னர் அவரையே நீக்கி விட்டனர். இது தான் காங்கிரஸ் கட்சி. 
தமிழ்நாட்டில் ஒரு போதும் காங்கிரஸ் கட்சி தலை தூக்க முடியாது என முதலமைச்சர் கூறி இருப்பது 100 சதவீதம் உண்மை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முஸ்லிம் களுக்கு எதிரானவர் என கூறுவது உண்டு. ஆனால் முஸ்லிம்கள் தேர்ந்தெடுத்து தான் அவரை பதவியில் உட்கார வைத்துள்ளனர். அங்கு அரசு சார்பில் இலவசம் தேவையில்லை என மக்கள் கூறி விட்டனர்.

அதனால் மின்சார தட்டுப் பாடும் இல்லை. 
அரசு மது பானமும் விற்க வில்லை. இங்கும் இலவசங்கள் வேண்டாம் என மக்கள் கூறினால் மதுபானம் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது. உத்தமதானபுரத்தில் தமிழ் தாத்தா உ.வே.சாவின் நினைவிடம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதை திறக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கின்றனர். அதை பூட்டி வைத்தால் தானே திறக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

ad

ad