புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை! இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு
தமி­ழீழம் நீண்ட தொலை­வி­லில்லை' என பார­திய ஜனதாக் கட்­சியின் மூத்த உறுப்­பி­னரும் இந்­தி­யாவின் முன்னாள் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்­சியின் கூட்டம் ஒன்றில் அண்­மையில் தெரி­வித்­துள்ளார்.
ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியற் தீர்வை எட்­டுதல் தொடர்­பாக பார­திய ஜனதாக் கட்­சியின் ஒன்­று­கூ­டலில் விவா­திக்­கப்­பட்ட போது, தற்­போது இந்த நிலை வேறு­பட்­டுள்­ளது என்­பதை ஜஸ்வந்த் சின்ஹா வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
ஈழம் என்­பது மிகக் கிட்­டிய தூரத்தில் உள்­ளது. தற்­போது பங்­க­ளாதேஷ் சுதந்­திர நாடாக மாறி­விட்­டது. இதே­போன்று வட­சூடான் மற்றும் தென்­சூடான் ஆகி­ய­னவும் தற்­போது சுதந்­தி­ர­ம­டைந்­து­விட்­டன" என ஜஸ்வந்த் சின்ஹா தனது விவா­தத்தின் போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
தனது உரையின் போது, கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் தனக்குச் சொந்­த­மாக்க வேண்டும் எனவும் இதன்­மூலம் இந்­திய மீன­வர்­களின் மீன்­பிடி உரி­மைகள் நிச்­ச­யப்­ப­டுத்­தப்­பட்டு அவர்­க­ளுக்­கான மீன்­பிடி எல்­லைகள் மீள­வ­ரை­ய­றுக்­கப்­பட முடியும் எனவும் இலங்கை கடற்­ப­டையால் இந்­திய மீன­வர்கள் படு­கொலை செய்­யப்­ப­டு­வது தடுக்­கப்­பட முடியும் எனவும் பார­திய ஜனதாக் கட்­சியின் மூத்த உறுப்­பினர் ஜஸ்வந்த் சின்ஹா சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
கச்­ச­தீவை நாம் மீளப்­பெற்றால் எமது மீன­வர்கள் பாதிக்­கப்­பட மாட்­டார்கள். இதன்­மூலம் இந்­தியக் கடற்­ப­ரப்பை நாங்கள் கட்­டுப்­ப­டுத்த முடியும்" எனவும் இவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.
எமது மீன­வர்கள் படு­கொலை செய்­யப்­ப­டு­வது தொடர்பில் இனியும் பொறுத்துக் கொள்ள முடி­யாது என இந்­தியா இலங்­கை­யிடம் கூற­வேண்டும்.
இந்­தி­யாவின் தற்­போ­தைய வெளி­யு­றவுக் கொள்­கை­யா­னது குழப்­ப­மா­ன­தாக உள்­ளது. நாட்டின் எதிர்­காலம், அதி­காரம் மற்றும் உறு­தித்­தன்மை போன்­றன ஆபத்­திற்கு உள்­ளா­கலாம்.
தற்­போது இந்­தி­யாவை ஆளும் அர­சாங்­கமும் பிர­த­மரும் பல­வீ­ன­மா­ன­வர்­க­ளாக இருக்­கலாம். ஆனால் இந்­திய மக்கள் பல­வீ­ன­மா­ன­வர்கள் அல்ல" என ஜஸ்வந்த் சின்ஹா மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.
எமது அயல்­நா­டான இலங்­கையின் வடக்கில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொ­லை­க­ளுக்கு சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தான் பொறுப்பு என்பதை மக்களிடம் வீடுவீடாகச் சென்று எடுத்துக்கூற வேண்டும்  எனவும் தனது உரையின் போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹா வலியுறுத்தினார்.

ad

ad