புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

விஜய் ரீவி சுப்பர் சிங்கர் 4 வெற்றியாளர் திவாகர்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் 4 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு  ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரமாக மிகவும் சூப்பராக பாடிய ஐவரோடு இன்று கடைசி சுற்று முடிந்துள்ளது.

ஐவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு நன்றாகவே பாடினார்கள்.

இந்நிலையில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து சங்கீத அறிவின்றி  தனது முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் திவாகர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இச்சூப்பர் சிங்கர்4 இல் வெற்றி பெற்றுள்ளார்.

கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து இன்று வெற்றிவாகை சூட்டிய  திவாகருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு,

இரண்டாம் இடத்தைப் பெற்ற சையத் சுபகானுக்கும், மூன்றாம் இடத்தைப் பெற்ற சரத் சந்தோஸ் க்கும்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

திவாகரின் பாடலை இன்றைய பைனல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த பாடகி ஞானகி அம்மா ரசித்ததோடு திவாகரை மேடையில் கட்டியணைத்து முத்தமிட்டு அவருக்கு தன்னிடமிருந்த ஒரு சிறுதொகைப் பணத்தை அன்பளிப்பாகவும் வழங்கியிருந்தார்.

மேலும் வெற்றிபெற்ற திவாகருக்கு 60 இலட்சம் பெறுமதியான வீடு பரிசாக கிடைத்துள்ளது.



மேலதிக விபரங்களை காணொளியில் பார்வையிட இங்கே அழுத்தவும்





ad

ad