புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

சுஜிபாலா என் மனைவியாக வாழ்ந்தார்: புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர்

நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மைதான் என்று உண்மை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

நடிகை சுஜிபாலா, இயக்குனர் ரவிக்குமார் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் ரவிக்குமார், உண்மை படத்தை தொடங்கியபோதே எங்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அதன்பிறகு நான் அவரை பெண் கேட்டேன், எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதால் நாங்கள் பிரிய வேண்டியதாகிவிட்டது.
மீண்டும் சில மாதங்களுக்கு பின் படப்பிடிப்பு தொடங்கியபோது நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். சுஜிபாலா எனக்கு தங்கசங்கிலி பரிசளித்தார்.
மேலும் நாங்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம், ஆனால் எங்களை சுஜிபாலாவின் தாயார் பிரித்துவிட்டார்.
நான் ராயப்பேட்டையில் உள்ள நடனப்பள்ளிக்கு சென்றது உண்மை. பேஸ்புக்கில் சுஜிபாலா இன்னொரு ஆணுடன் இருந்ததை சுட்டிக்காட்டி, அவரிடம் நியாயம் கேட்டேன்.
அதனால் எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு வைத்திருப்பேன் அதை கேட்க நீங்கள் யார்? என்று சுஜிபாலா கேட்டார்.
இதனால் கோபமடைந்த நான் அவரை அறைந்துவிட்டேன். ஆனால் கொலைமிரட்டல் எதும் விடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ad

ad